Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி விமான நிலையத்தில் சுப. உதயகுமார் தடுத்து நிறுத்தப்பட்டார்

வீரமணி பன்னீர்செல்வம்
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (17:41 IST)
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் டெல்லி விமான நிலையத்தில் நேபாளம் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.
 
நேபாளத் தலைநகர் காட்மண்டுவில் ஐ.நா. மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சுப. உதயகுமார் டெல்லி விமான நிலையம் சென்றார். ஆனால் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணை நடத்தினர்.
 
அப்போது உதயகுமார் நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி சான்றிதழ் பெற்றிருப்பதை அதிகாரிகளிடம் எடுத்துக் காட்டினார். ஆனாலும் நெல்லை எஸ்.பி.யுடன் ஆலோசித்த பின்னர்தான் நேபாளம் செல்ல அனுமதிப்போம் என்று கூறி உதயகுமாரை தடுத்து வைத்தனர்.
 
இந்நிலையில், அவர் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டுச் சென்றது. தற்போது, சுப. உதயகுமாருக்கு எதிராக எந்த பிடியாணையும் இல்லை. அவர் மீது போடப்பட்ட வழக்குகளை மாவட்ட நிர்வாகம் தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Show comments