Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணாநகர் டவரில் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட காதலர்கள்:

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (16:31 IST)
சென்னையில் உள்ள சுற்றுலா பகுதிகளில் அண்ணா நகரில் உள்ள டவரும் ஒன்று. இந்த டவருக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் காதலர்களும் அடிக்கடை வருகை தருவதுண்டு. காதலர்களின் விருப்பத்திற்குரிய இடங்களில் ஒன்றாகிய இந்த அண்ணா நகர் டவரில் இன்று ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இங்கு இன்று காலை வந்த காதலர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் காதலன் காதலியை கத்தியால் குத்த, அதே கத்தியை காதலரிடம் இருந்து பறித்து காதலனை காதலி குத்த சில நிமிடங்களில் அந்த பகுதியே ஒரே ரத்தக்களமாகியது.
 
தற்போது இருவரும் கத்திக்குத்தால் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கத்திக்குத்து சம்பவத்தால் அண்ணா நகர் டவரில் சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments