Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீர்திருத்தப் பள்ளியில் கலவரம்… தாக்கிக் கொண்ட மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா ?

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (15:14 IST)
மதுரையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையினுள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று உள்ளது. அதில் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அங்கு வாரம் ஒரு முறை திரைப்படங்கள் திரையிடப்படுவது வாடிக்கை.

கடந்த சில வாரங்களாக அங்கு புதுப் படங்கள் திரையிடப்படாமல் பழைய படங்களே திரையிடப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்குள்ள சிறார்கள் கடுப்பாகி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். மேலும் தங்களைத் தாங்களே தாக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கே அனுப்பப்பட்டுள்ளனர். இந்த கலவரம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நமது ஏவுகணைகள் எதிரி நாட்டில் விழும்போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று சத்தம் கேட்கும்! - பிரதமர் மோடி!

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. வீண் விளம்பரம் செய்கிறார் முதல்வர்.. அண்ணாமலை

இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

லிங்க் கிடைத்தது.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 93.60% தேர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments