Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறும்பு செய்த சிறுவன்… அடித்த அக்கா- நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (10:04 IST)
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் மர்மமான முறையில் இறந்த சிறுவனின் அக்கா கைது செய்யபப்ட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சூசை மேரி என்பவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். வேலைக்கு செல்லும் இவர் தனது குழந்தைகளை அக்கா மகளான மேரியிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் 5 வயது சிறுவனான ஆபேல் மயங்கி விழுந்துவிட்டதாக மேரி சூசை மேரிக்கு தகவல் சொல்லியுள்ளார்.

மருத்துவமனைக்கு சிறுவனைத் தூக்கிச் சென்ற நிலையில் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்த நிலையில் உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. அப்போது தலையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால் சிறுவன் தாக்கப்பட்டு இருப்பது உறுதியானது.

பின்னர் சிறுவனின் அக்கா மேரியிடம் விசாரணை செய்த போது அவர் ‘ஆபேல் குறும்பு செய்ததால் அடித்தேன்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments