Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சலி கூட்டத்திற்கு கூப்பிடாத காங்கிரஸ்; கடுப்பான குஷ்பூ!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (14:19 IST)
மறைந்த எம்.பி வசந்தகுமாருக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த அஞ்சலி கூட்டத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ அழைக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உயிரிழந்த நிலையில் அவருக்கான அஞ்சலி கூட்டம் இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி கூட்டத்திற்கு காங்கிரஸ் தமிழக செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பூவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பூ “தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் ஒரே செய்தி தொடர்பாளர் நான். ஆனால் வசந்தகுமார் எம்.பியின் நினைவஞ்சலி குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. கட்சியை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனமாக ஆக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கையை ஆதரித்து குஷ்பூ பதிவிட்டதும், அது காங்கிரஸினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments