Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 15 நாட்களில் களத்திற்கு திரும்பும் திமுக தலைவர் கருணாநிதி!

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (17:14 IST)
இன்னும் 15 நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கட்சிப் பணி ஆற்றுவார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு மாத காலத்திற்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.

இதனையடுத்து, திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 04ஆம் தேதி பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டது.

கூட்டத்தில், இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவின் சட்டவிதி 18இல் திருத்தம் செய்யப்பட்டு, ஸ்டாலின் செயல் தலைவராக ஆக்கப்பட்டார். இதற்கிடையில் கருணாநிதியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், ”தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சையும், ஓய்வும் எடுத்து வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 15 நாட்களில் கட்சிப் பணி ஆற்றுவார்” என்றார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments