Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.அழகிரியை மறந்து நீண்ட நாட்கள் ஆகிறது - மு.கருணாநிதி

Ilavarasan
திங்கள், 19 மே 2014 (09:44 IST)
மு.க. அழகிரியை மறந்து நீண்ட நாள்கள் ஆவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
 
இது தொடர்பாக நிருபர்களின் கேள்விகளுக்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பதில்:
 
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறதே?
 
பதில்: அது பொய். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜிநாமா செய்வதாக மட்டும் என்னிடம் வந்து சொன்னார்.
 
கேள்வி: மக்களவைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணம் என்ன?
 
பதில்: வாக்குகள் குறைந்ததுதான்.
 
கேள்வி: தோல்வி குறித்து ஆராய கழகத்தின் உயர் நிலை செயல்திட்டக் குழு கூடுகிறதா?
 
பதில்: திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு மிக விரைவில் கூடி இதைப் பற்றி ஆய்வு செய்யும்.
 
கேள்வி: தன்னை விலக்கியதால்தான் திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது என அழகிரி சொல்லியிருக்கிறாரே?
 
பதில்: அவரை நானும், திமுகவும் மறந்து பல நாள்கள் ஆகின்றன. அவர் திமுகவில் இருக்கும்போதே இரண்டு, மூன்று முறை திமுக படுதோல்வி அடைந்திருக்கிறது.
 
கேள்வி: மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்வதை ஒரு நாடகம் என அழகிரி கூறியிருக்கிறாரே?
 
பதில்: அவரைப் பற்றி நான் இனியும் பேச விரும்பவில்லை. நான் முன்பே கூறியதைப் போல அவரை நான் மறந்து நீண்ட நாளாகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments