Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி சிவா மனைவி மரணம்: கருணாநிதி இரங்கல்

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (09:01 IST)
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகாராணியின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 
திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் துணைவியார் தேவிகாராணி சனிக்கிழமை (ஆக. 2) மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
 
கடந்த சில மாதங்களாக நோயினால் தாக்குண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியபோது, கண்ணீருடன் அந்தச் செய்தியை என்னிடம் திருச்சி சிவா தெரிவித்தார்.
 
மேலும் ஒரு சில மாதங்களாவது அவர் உடல் நலத்தோடு இருப்பார் என்று எண்ணியதற்கு மாறாக அவர் மறைந்து விட்ட செய்திதான் கிடைத்தது.
 
மனைவியை இழந்து வாடும் சிவாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கருணாநிதி கூறியுள்ளார்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments