Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னதை விட அதிகமாக திறந்தவிட்ட கர்நாடகா?! – காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (09:47 IST)
தமிழகத்தின் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில் நீர்வரத்து அளவு அதிகரித்துள்ளது.



தமிழக விவசாய பயன்பாடுகளுக்காக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வந்த நிலையில், தண்ணீர் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவில் போராட்டங்களும் நடைபெற்றன.

இதுகுறித்து நடந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்தில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று வரை கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 4,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 6,300 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இது விவசாய தேவைகளை நிறைவேற்றும் என்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments