Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (15:39 IST)
கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த எஸ்.நாகராஜன், மின்னணு நிர்வாகப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக, சஜ்ஜன் சிங் ஆர் சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே.பாஸ்கரன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ள வி.கே.சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
சேலத்தில் உள்ள பட்டு வளர்ச்சிப் பிரிவு இயக்குநர் எஸ்.பிரபாரன், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவின் ஆணையரான பி.செந்தில்குமார், சேலத்தில் உள்ள பட்டு வளர்ச்சிப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments