Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஸ்டாலின் சர்வாதிகாரியா?”:விளக்கம் அளிக்கும் கனிமொழி

Arun Prasath
திங்கள், 11 நவம்பர் 2019 (12:31 IST)
கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதற்கு திமுக எம்.பி. கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பல வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி.கனிமொழி, திமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், ”கட்சியின் வளர்ச்சிக்காக முடிவெடுக்க வேண்டும் என்றால், நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி படு தோல்வியை கண்ட நிலையில், நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கட்சி முன்னேற்றத்திற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்குமான பல திட்டங்களை அறிவித்தார் முக ஸ்டாலின். இதனை தொடர்ந்து தற்போது கனிமொழி, கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் கூறியதற்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments