Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை காக்க இவ்ளோ பிரம்மாண்டமான நாடாளுமன்றம்? – கமல்ஹாசன் கேள்வி!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (09:48 IST)
இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கியுள்ள நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தற்போது நாடு உள்ள சிக்கலான நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அவசியமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே....” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments