Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள குப்பைகளை தமிழகத்தில் கொட்டுவதா? – கமல்ஹாசன் கண்டன ட்வீட்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (12:31 IST)
கேரள மருத்துவ கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டுவதாக நீண்ட நாளாக இருந்து வரும் புகார் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளாவிலிருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சிலர் தமிழக எல்லை பகுதியில் கொட்டி செல்வது போன்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதுகுறித்து அவ்வபோது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் முறைகேடாக இது போல குப்பைகளை கொட்டும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “கேரளத்தில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பொள்ளாச்சிக்கு அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறதாம். சூழலை அழிக்கும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இரு மாநில அரசும்  இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments