Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவா? பொங்கிய கமல்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (13:26 IST)
கேரளாவில் இருந்து இன்று காலை தமிழக எல்லைக்குள் வந்த வி.எச்.பி அமைப்பின் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு அதிமுக, பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த யாத்திரைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், சீமான் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கைதாகியுள்ளனர்.

இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ரதம் திட்டமிட்டபடி தனது யாத்திரையை தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு ஒருசில ஆதரவும், பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதுகுறித்து கமல் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் ஒருசிலவற்றை தற்போது பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments