Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மய்யத்தில் அவுட் ஆகும் இன்னொரு விக்கெட்! – பாஜகவில் இணைவதாக தகவல்!

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:00 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மாநில செயலாளர் சரத்பாபு விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கட்சியில் சேர்ந்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட சரத்பாபு ம.நீ.மவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது முற்றிலும் ஈடுபாடு குறைந்து வருவாய் ஈட்டும் மனநிலைக்கு அவர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியுள்ள சரத்பாபு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments