Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (07:51 IST)
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடை ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாகவும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கள்ளக்குறிச்சியில் தீபாவளிக்காக விற்பனை செய்வதற்காக பட்டாசு கடைகள் அதிக அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் பல கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் என்ற பகுதியில் போடப்பட்டிருந்த பட்டாசு கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது
 
இந்த தீவிபத்தில் கடை ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர் என்பதும் இருப்பினும் பட்டாசு கடையில் உள்ள அனைத்துப் பட்டாசுகளும் எரிந்து நாசமாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments