Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: மேலும் ஒருவர் பலி.. உயிரிழப்பு 66 ஆக அதிகரிப்பு

Mahendran
புதன், 10 ஜூலை 2024 (14:27 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் ஏற்கனவே 65 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியாகிவிட்டதை அடுத்து உயிரிழப்பு 66 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணா புரம் பகுதியைச் சேர்ந்த 229 பேர் கடந்த ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 65 பேர் வரை சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 மேலும் பலர் தொடர் சிகிச்சையிலிருந்து வந்த நிலையில் இன்று சிவராமன் என்பவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66 என்று உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சை பெற்று வரும் சிலர் குணமாகி வருவதை அடுத்து இனிமேல் உயிரிழப்பு ஏற்படாது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments