Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:06 IST)
சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் கையில் வேலை ஏந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் மறுப்பு பேசிய இயக்கத்திலிருந்து வந்தவர் இன்று ஓட்டுக்காக வேலை கையில் எடுப்பதாக மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் வேலை ஏந்தினாலும் அவருக்கு முருகன் அருள்தரமாட்டார் என விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் திருச்சி மாவட்ட செயலாளருமான கே என் நேரு, நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது ‘ருள் தருவதற்கு, முதல்வருக்கு மட்டும் முருகன் ஸ்பெஷல் பாஸ்போர்ட்டா கொடுத்துள்ளார்?  எங்களுக்கும் முருகன் பாஸ்போர்ட் கொடுத்துள்ளார். யாருக்கு அருள்தரவேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது முருகன். அவரின் அருளால் நாங்கள் வெற்றி பெறுவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments