Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களே உஷார்: சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் சேர ஜூன் 30ஆம் தேதி கடைசி நாள்

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2015 (00:35 IST)
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர ஜூன் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.
 

 
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் நாடு முழுவதும் ஜனவரி முதல் தேதி அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 53 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளில், சுமார் ஒரு கோடியே 38 லட்சம் வாடிக்கையாளர்கள் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால், சுமார் 15 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேராமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமையல் எரிவாயு நேரடி மானியத்திற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம்  தேதியுடன் முடிந்து விட்டது. ஆனாலும், நேரடி மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு முன்வைப்புத் தொகை ரூ.568 மற்றும் ஏப்ரல் மாதம், மே மாதம் மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான மொத்த மானியத் தொகை  கிடைக்கும்.  அதற்கு பின்பு, இணையும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான மானியம் கிடைக்காது.
 
ஆனால், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது இணைகிறார்களோ அந்த மாதம் முதல் மானியத் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
 

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments