Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (14:10 IST)
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் பிரசாந்தை திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமி, அதன் பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். சென்னை போக் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு இருக்கிறது. தற்போது அடையாறில் தங்கியிருக்கும் கிரகலட்சுமி வாரத்திற்கு இரண்டு முறை இந்த வீட்டிற்கு வருவாராம். 
 
இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டின் பின்பக்க ஜன்னலில் உள்ள கிரில் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், கிரகலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  போலிசார் விரைந்து சென்று சோதனை நடத்திய போது, கிரகலட்சுமியின் அறையில் உள்ள பீரோவிலிருந்து 20 சவரன் நகை,  ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் கிரகலட்சுமியின் தங்கை அறையில் 150 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில்தான் விருகம்பாக்கம் ஐ.ஓ.பி கிளையில் லாக்கரை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக சென்னையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments