Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: டிராபிக் ராமசாமி மீது காவல் நிலையத்தில் புகார்

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2015 (01:09 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவதூறாக பேசியதாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

 
அரக்கோணம் நகர காவல் நிலையத்தில், அரக்கோணம் ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.ஆறுமுகம், ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில், கடும் மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில், வெள்ள நிவாரண பணிகள் குறித்து, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசும் வகையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவதூறாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது பேச்சு வாட்ஸ்அப் மூலம் மிகவேகமாக  பரவி வருகிறது. எனவே, முதல்வர் ஜெயலலிதாவை, அவதூறாக பேசிய டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இந்த புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட அரக்கோணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.  
 

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments