Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவாக மாறிய தீபா: தொண்டர்கள் நெகிழ்ச்சி!

ஜெயலலிதாவாக மாறிய தீபா: தொண்டர்கள் நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (14:47 IST)
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளான இன்று அவரது உருவ சிலைக்கும் அவரது சமாதிக்கும் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இன்று அவரது தோற்றம் அச்சு அசலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே இருந்ததாக தொண்டர்கள் கூறுகின்றனர்.


 
 
வழக்கமாக சுடிதாரில் தோற்றமளிக்கும் ஜெ.தீபா இன்று சேலை அணிந்து, பொட்டு வைத்து, ஜெயலலிதா போன்றே பெரிய வாட்ச் அணிந்து இருந்தார். ஜெயலலிதா சேலையின் தலைப்பால் தோள்பட்டையை எப்படி மூடிக் கொள்வாரோ அதேபோல் தீபாவும் இன்று தன்னை முழுவதும் தனது அத்தை ஜெயலலிதா போல மாற்றிக் கொண்டு அவரைப் போலவே தோற்றம் அளித்தார்.
 
அவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தபோது அச்சு அசலாக ஜெயலலிதா போலவே இருந்தார் என்று தொண்டர்கள் அழுததாக பேசப்படுகிறது. அதே குரல், அதே கம்பீரம் என ஜெயலலிதாவை தீபா கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 
இந்நிலையில் இன்று தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்த தீபா தான் அரசியல் இறங்குவது உறுதி என தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அடுத்த அறிவிப்பு வரும் என அவர் கூறினார்.
 

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments