Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நடிகை

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2014 (07:19 IST)
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, நடிகை மாயா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
 
தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் மாயா. இவர் தனது மகள் குணப்பிரியாவுடன் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார்.
 
ஆணையர் அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்த அவர், திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைக்க முயற்சித்தார்.
 
இதைப் பார்த்த காவல் துறையினர், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். அப்போது, "அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும்“ என்று கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர், அவரை வேப்பேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவரை எச்சரித்தனர். பின்னர் மாயாவை காவல் துறையினர் தங்கள் ஜீப்பில் ஏற்றிச் சென்று சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments