Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா அதிரடி பரப்புரை

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (19:45 IST)
நேற்று முன்தினம் முதல் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.


 
 
சென்ற முறை தேர்தல் பிரச்சாரத்தில், மக்களை பார்த்து நீங்கள் செய்வீர்களா? என்ற புதிய யுக்தியை பயன்படுத்திய ஜெயலலிதா இந்த முறை அதனை பயன்படுத்தாமல், வித்தியாசமாக அனுகுகிறார்.
 
இந்த முறை அதிகமுறை மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வசனத்தை பயன்படுத்துகிறார். மேலும் இன்றைய பொதுக்கூட்டத்தில், தமிழக மக்களுக்கு தன்னை தாயாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
 
விருத்தாசலத்தில் பேசிய அவர், 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற அடிப்படையில் எனது பொது வாழ்வு இருக்கிறது. 'சொன்னதை செய்வேன், சொல்வதைத்தான் செய்வேன்' என்று ஏற்கனவே நான் சொன்னது உண்டு, ஆனால் நான் இப்போது சொல்லாததையும் செய்திருக்கிறேன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன். இப்போது நான் குறிப்பிட்ட திட்டங்கள் எல்லாம் நீங்களே எண்ணி பார்க்காதவை, எதிர்பார்க்காதவை என்றார்.
 
மேலும் ஒரு தாய்க்குதான் தன் பிள்ளைக்கு என்ன தேவை என்று தெரியும். அதுபோல வருங்காலங்களிலும் உங்களுக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும். உங்கள் நன்மைக்காக, உங்கள் மேன்மைக்காக உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும். அதை நிச்சயம் செய்வேன் என்றார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments