தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வார காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கடந்த ஒரு வார காலமாக செய்திகள் வருகின்றன.
தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு, லண்டன் மருத்துவர், எயிம்ஸ் மருத்துவ குழு, அப்பல்லோ மருத்துவ குழு, சிங்கப்பூர் பிசியோ தெரபி மருத்துவர்கள் என தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களின் சிகிச்சைகள் பலனளித்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் முதல்வர் ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்வதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!