Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (10:37 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதானவிசாரணையை உச்சநீதிமன்றம் மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
 

 
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.
 
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே,பி.வி.ஆச்சார்யா ஆகியோரும், சுப்பிரமணியசாமி தரப்பில் அவரும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஆகியோரும் தங்களின் இறுதி வாதத்தை முடித்து விட்டனர்.
 
தற்போது சசிகலா தரப்பில் சேகர் நாப்தேவாதங்களை தொடர்ந்து வருகிறார். நேற்று புதனன்றும் அவர் தமதுவாதங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் சசிகலாவின் வழக்கறிஞர் சேகர் நாப்தே தமது வாதங்களை தொடர உள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments