Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மரணம்: திவாகரனுக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (16:14 IST)
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் மே3ஆம் தேதி ஆஜராக திவாகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

 
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. சசிகலா குடும்பத்தினர், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தற்போது சசிகலா சகோதரர் திவாகரனை மே 3ஆம் தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த ஜெயலலிதா குறித்த மருத்துவ விவரங்களை ஆய்வு செய்ய மருத்துவக்குழு ஒன்றை அரசிடம் ஆணையம் கேட்டிருந்தது. இதற்கு மருத்துவ குழுவை ஆணையமே அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
ஜெயலலிதாவின் மருத்துவ ஆவணங்களை சரிபார்க்க விரைவில் ஆய்வுக்குழு அமைக்கப்படும் என  ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments