Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வழக்கு; ஜெ தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2015 (20:07 IST)
5 நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரர் இல்லை என்றால் ஏன் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை? என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம், நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 14 ஆவது நாளாக இன்று விசாரணை நடந்தது.
 
இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரரராவ் வாதம் முடிந்த நிலையில், இன்று ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதாட்டார்.
 
அப்போது, ''இந்த வழக்கில் தொடர்புடைய 7 நிறுவனங்களில் 2இல் மட்டுமே ஜெயலலிதா பங்குதாரராக உள்ளார். மேலும், ஜெயலலிதாவின் வருவாயை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.
 
இதைக் கேட்ட நீதிபதி, 'நாகேஸ்வரராவ் வாதாடிய கருத்தையே மீண்டும் நீங்கள் கூறி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். புதிய வாதங்களை முன் வையுங்கள்' என உத்தரவிட்டார்.
 
மேலும், 5 நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரர் இல்லை என்றால், கடந்த 15 ஆண்டுகளாக இதுகுறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments