Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதற்கு கர்நாடக அரசு காரணம் – மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (13:17 IST)
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்க்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை உடனடியாக கார்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஆண்டு தோறும்  தமிழகத்தில் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடி என்பதால் காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு கர்நாடக அரசு 94 டிஎம்சி தண்ணீர்க்கு பதிலாக வெறும் 64 டிஎம்சி தண்ணீரை மட்டுமே காவிரியில் திறந்துவிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.. கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்து விடாததால், மேட்டூரின் அணயில் நீர் இல்லாமல் தண்ணீர் திறக்கப்படவில்லை.இதனால், குறுவை சாகுபடி இந்த ஆண்டு செய்ய முடியாமல், தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய மீதமுள்ள 27.557 டிஎம்சி தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments