Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை பேர் வந்தாலும் ஒத்தையாக சமாளிப்போம்: அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (14:43 IST)
ரஜினி, கமல், திமுக என எத்தனை பேர் தனித்தனியாக வந்தாலும், கூட்டணியாக வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் ஒத்தையாக அனைவரையும் சமாளிக்கும் திறன் எங்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
 
உலக மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்த அவ்வையார் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவதுள்
 
நடிகர் ரஜினிகாந்த் எந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைந்தார் என்பது தனக்கு தெரியாது என்றும் ரஜினி-கமல் திமுக என எத்தனை காட்சிகள் கூட்டணியாக வந்தாலும் தனித்தனியாக வந்தாலும்  ஒத்தையா அதனை அதிமுக எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்
 
ரஜினி கமல்
ரஜினி மற்றும் கமல் உள்பட யாரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் மக்கள்தான் அங்கீகாரம் தரவேண்டும் அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவருடைய கொள்கைகள் என்ன, கோட்பாடுகள் என்பதை எல்லாம் பார்த்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் 
 
எங்களைப் பொருத்தவரை எத்தனை பேர் வந்தாலும் சரி ஒத்தையா நின்னு நாங்கள் சமாளிப்போம் நீச்சல் தெரிந்தவர்களுக்கு ஆழத்தை பற்றிய கவலை இல்லை. எவ்வளவு ஆழமான கடல் ஆக இருந்தாலும் அதிமுகவினர்களுக்கு அனைத்து வகை நீச்சல்களும் தெரியும் என்பதால் கடலில் தூக்கி போட்டாலும் நாங்கள் நீந்தி வந்துவிடுவோம், ஆனால் மற்றவர்களுக்கு நீச்சல் தெரியுமா? கரை சேருவார்களா? என்பது எனக்கு தெரியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments