Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு விவகாரம்: ஓபிஎஸ் கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:00 IST)
மன்னிப்பு கேட்டால் யாரையும் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம் என ஓபிஎஸ் கூறிய குட்டிகதைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஒரு கதை மூலம் தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வதே நல்ல தலைமைக்கு அழகு என கூறியிருந்தார் 
 
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறிய இந்த கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய குட்டி கதை சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் சசிகலா இல்லாமல் அதிமுக தற்போது நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதிலிருந்தும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் தயாராக இருப்பதாகவும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments