Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை கமல் எதிர்த்தால் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ்தான் - அமைச்சர் திமிர் பேச்சு

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (13:39 IST)
அதிமுக ஆட்சி பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறி வரும் விமர்சனம் பற்றி  அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்தனர். ஆனாலும், கமல்ஹாசன் தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ அதிமுகவை எதிர்த்து கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தால் மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் நடக்கும். எத்தனை ஸ்டாலின், கமல் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” என அவர் கருத்து தெரிவித்தார்.
 
அதாவது, இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கமல்ஹாசன் இறுதியில் பைத்தியம் பிடித்து அலைவார் என்கிற ரீதியில் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments