Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் - சுப்பிரமணிய சுவாமி நம்பிக்கை

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2017 (18:13 IST)
இந்த வருடம் கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது “காங்கிரஸ் ஆட்சியின் போது பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் மாடுகளை சேர்த்துவிட்டனர். அதனால்தான் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
 
இந்த பட்டியலில் இருந்து மாடுகளை நீக்க வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். மாடுகளை நீக்கிவிட்டு புது பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன்படி, இந்த வருடம் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments