Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (21:43 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


 

 
நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சிறப்பு கூட்டம் கூடுகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
அம்மா மக்களுக்காக உழைத்தவர். குடும்ப ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியோடு இருந்தவர் அம்மா. பொதுமக்கள், தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம். எங்களது இந்த அறப்போராட்டம் கண்டிப்பாக வெற்றிப் பெறும், என கூறினார்.
 
அவரைத்தொடர்ந்து அவரது வீட்டிலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்திய இளைஞர்கள் செய்தியாளர்கள் பேட்டி அளித்தனர்.
 
சசிகலா தரப்பு ஆட்சிக்கு வரக்கூடாது. அப்படி அவர்கள் ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடந்த போராட்டத்தை விட பெரிய அளவிலான போராட்டம் நடைப்பெறும். ஓ.பி.எஸ்.ஐ அவர்களை முதல்வராக்க உதவி செய்வோம். ஓ.பி.எஸ்.க்கு தான் எங்கள் ஆதரவு, என்று கூறினர்.
 
சமூக வலைதளங்களில் பெரும்பாலானவர்கள் மறுதேர்தல் நடைப்பெற வேண்டும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் திமுக மற்றும் ஆதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் எதிராகவே கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments