சசிகலா தலைமையில் ஜல்லிக்கட்டா?: போராடிய மாணவர்களுக்கு இது பெரிய இழிவு!

சசிகலா தலைமையில் ஜல்லிக்கட்டா?: போராடிய மாணவர்களுக்கு இது பெரிய இழிவு!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (14:44 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தனர். இதன் விளைவாக உடனடியாக சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது.


 
 
இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிகமாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்த உடன் அது சசிகலாவால் தான் கிடைத்தது போன்ற மாய பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர் அதிமுகவினர்.
 
அதுமட்டுமில்லாமல் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடீரென நிறுத்தப்பட்டு வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமை தாங்கி தொடங்கி வைக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

 
இது ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
 
அதில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சசிகலா தொடங்கி வைக்கிறார்: செய்தி- ஜல்லிக்கட்டுக்காக போராடிய  மாணவர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என கூறியுள்ளார் ராமதாஸ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments