Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

Webdunia
வியாழன், 18 மே 2023 (07:44 IST)
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது 
 
ஆனால் சென்னை மெரினாவில் பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. 
 
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறுமா அல்லது தடை செய்யப்படுமா என்பது இன்றைய தீர்ப்பில் தான் தெரிய வரும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments