Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தேர்தல்கள் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்: ஜெகன்மோகன் வலியுறுத்தல்!

Mahendran
செவ்வாய், 18 ஜூன் 2024 (13:14 IST)
இந்திய தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார். 
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
 
சமீபத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்கு பதிவின் மூலம் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ததை அடுத்து ராகுல் காந்தி உள்பட பலர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்திய தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். முன்னேறிய ஜனநாயக நாடுகள் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை என்றும் வாக்கு சீட்டை முறையை பின்பற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஜனநாயகத்தின் உண்மையான உணர்வுகளை நிலைநாட்ட நாமும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments