Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.138 கோடி பணம்; 157 கிலோ தங்கம் - அதிர்ச்சி கிளப்பும் சேகர் ரெட்டி

Webdunia
சனி, 10 டிசம்பர் 2016 (09:39 IST)
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் செய்து வரும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி பணம் மற்றும் தங்க நகைகள் சிக்கியுள்ளது.


 

 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினராகவும், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்வதியில் முன்னணியில் இருந்து வருபவர்தான் இந்த சேகர் ரெட்டி. மேலும், தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி நடத்துவற்கான உரிமம் பெற்றவர். அவர் பல முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
 
உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், இவரது வீடு மற்றும் அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீர் சோதானை நடத்தினர். 
 
அதில், ரூ.106 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது. அதில், ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 127 கிலோ தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


 

 
இதையடுத்து, நேற்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.32 கோடி பணம் மற்றும் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதன் மூலம் மொத்தமாக ரூ.138 கோடி பணமும், 157 கிலோ தங்கமும் சேகர் ரெட்டியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.


 

 
இவை அனைத்தும் தன்னுடையதுதான் என சேகர் ரெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். சமீபகாலமாக இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படவில்லை. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது சிபிஐ கைவசம் மாறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments