Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இளம்பெண் மர்ம மரணம் – அம்பத்தூர் தொழில் பூங்காவில் பரபரப்பு !

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (09:09 IST)
சென்னை அம்பத்தூரில் வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ். பொறியியல் பட்டதாரியான இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் செப்டம்பர் 19 ஆம் தேதி வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் வேலைக்கு சேர்ந்த முதல்நாளே அலுவலகக் கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்நிலையில் இது சம்மந்தமாக விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் டேனிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

8 வது தளம் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மேல்தளம் என்பதாலும் அந்த பகுதி அனுமதி மறுக்கப்பட்ட பகுதி என்பதாலும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அம்பத்தூர் பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பான சூழல் உருவானது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments