Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் கட்சியில் இவ்வளவு பேர் விருப்ப மனுவா ?

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (10:58 IST)
வரும் நடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைக்க கமல்ஹாசன் கூட்டணி வைக்க முயன்றாலும், அவரது மக்கள் நீதி மய்யத்தை யாரும் பொருட்டாக நினைக்கவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தார்கள். இதனால் தனித்து விடப்பட்டவராக இருந்தார். இருப்பினும் அவரது முயற்சி சோடை போகவில்லை.
ம.நீ.மை 40 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார் கமல். இந்நிலையில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் கட்சி உறுப்பினராக அல்லாதவரும் மனுதாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.
 
இதற்கான விருப்ப மனு கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. இரு தினக்களுக்கு முன்பு சென்னை ஆழவார் பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து கமல் விருப்ப மனுக்களை பெற்றார். 
 
ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 7 ஆம் தேதி மாலையுடன் விருப்ப மனுக்கள் பெறுவது முடிவடைந்தது.
 
மநீமை சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை 1137 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments