Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசி.க்கு ஆதரவு தெரிவிக்க காங். எம்எல்ஏக்களுக்கு நிர்பந்தம்: திருநாவுக்கரசர் மீது ப.சிதம்பரம் புகார்!

சசி.க்கு ஆதரவு தெரிவிக்க காங். எம்எல்ஏக்களுக்கு நிர்பந்தம்: திருநாவுக்கரசர் மீது ப.சிதம்பரம் புகார்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (16:53 IST)
தமிழக அரசியல் களம் உக்கிரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழகத்தில் அசாதரணமான சூழலை உருவாக்கியுள்ளது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.


 
 
இதனால் சசிகலா முதல்வர் ஆவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஓபிஎஸுக்கு ஆதரவு பெருகுவதால் எம்எல்ஏ ஓபிஎஸ் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை சொகுசு விடுதியில் சசிகலா சிறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனாலும் ஓபிஎஸுக்கு தற்போது வரை 5 எம்எல்ஏக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது கணிசமான எம்எல்ஏ ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
 
இதனை சமாளிக்க காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை சசிகலா திருநாவுக்கரசரிடம் கேட்டிருப்பதாக கூறப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை அந்த கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் வற்புறுத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் ராகுல் காந்தியிடம் புகார் ஆளித்துள்ளார்.
 

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments