தூத்துக்குடியில் இணைய சேவை தொடங்கியது

Webdunia
திங்கள், 28 மே 2018 (07:27 IST)
தூத்துக்குடியில் இணைய சேவை முடக்கம் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அசம்பாவிதங்களைத் தடுக்க கடந்த 21 ந் தேதி மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை போடப்பட்டது. பதற்றம் நிலவியதால் 144 தடை நேற்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும்  தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதால் பல முக்கிய வேலைகள் முடங்கின. கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று காலை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியகம் உத்தரவு பிறப்பித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்.ஐ.சி பெண் ஊழியர் அலுவலகத்தில் உயிரோடு எரித்து கொலை.. விபத்து போல் நாடகமாடியது அம்பலம்..!

உடல் எடையை குறைக்க மதுரை கல்லூரி மாணவி சாப்பிட்ட மருந்து.. அடுத்த நாளே பரிதாப பலி..!

கரூர் மட்டுமில்ல!.. அந்த விஷயத்தையும் நோண்டிய சிபிஐ!.. என்னமோ நடக்குது!..

கூட்டணிக்கு வரும் டிடிவி தினகரன்!.. முக்கிய நிர்வாகிகளுடன் பழனிச்சாமி ஆலோசனை!...

யாரும் கூட்டணிக்கு வரலை.. தனியா போராடுவோம்.. நம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.. விஜய் முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments