Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம்!!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:07 IST)
திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் தற்போது நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு திருப்பதி முழுவதும் உள்ள தனியார் உணகங்களை முற்றிலும் மூடிவிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான திட்டம் மூலம் முழுமையாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. வருகிற மார்ச் 29 ஆம் தேதி முதல் திருப்பதிக்கு சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சியிலிருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. இந்த விமான சேவைக்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments