Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு: கரையை கடப்பது எப்போது?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (08:35 IST)
வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றிய நிலையில் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதை அடுத்து தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக மழை வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் நாளை அதாவது நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடக்கும்போது வட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments