Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை வந்த சீன உளவு கப்பல்! – ராமேஸ்வரத்தில் கடற்படை தீவிர கண்காணிப்பு!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (11:18 IST)
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5 இலங்கை வந்துள்ள நிலையில் இந்திய கடல்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் கடந்த 11ம் தேதியன்று இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் முதலில் கடலிலேயே இலங்கை அக்கப்பலை நிறுத்தி வைத்தது. பின்னர் சோதனைகளுக்கு பிறகு அம்பந்தொட்டை துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சீன உளவு கப்பல் ஒருவார காலம் அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிற்பதால் தென் இந்திய பகுதிகளில் உள்ள ராணுவ நிலையங்கள், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக இந்தியா கருதுகிறது.

இதனால் தென்னிந்திய வங்க கடல் பகுதிகளான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இந்திய கடற்படையின் கப்பல்கள் சுற்றி வந்துக் கொண்டுள்ளன. இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் க்ராப்ட் கப்ப உள்பட 8 கப்பல்கள், 2 விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments