Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் கூட போடாமல் ரத்தானது இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டி.. ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (06:36 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நேற்று டர்பன் நகரில் முதலாவது டி20 போட்டி நடக்க இருந்த நிலையில் இந்த போட்டி டாஸ் கூட போடாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி விளையாட உள்ளது. முதல் போட்டி நேற்று டர்பன் நகரில் நடக்க இருந்த நிலையில் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மழை பெய்தது. 
 
மழை நின்றவுடன் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை மழை விடவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. 
 
இதனால் டாஸ் கூட போடாமல் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி  நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments