அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் செந்தில்பாலாஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அவரது வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர்.விஜய்பாஸ்கரின் கரூர் வீடு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள குடியிருப்பு உள்ளிட்ட 20 இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் காரை கூட விடாமல் சோதனை மேற்கொண்டு வருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ரெய்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!