Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 3வது நாளாக வருமானவரி சோதனை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:41 IST)
சென்னை மற்றும் கோவையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்று முன்தினம் தொடங்கிய வருமான வரி சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையிலுள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளான சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்று முன்தினம் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்
 
இந்த சோதனை நேற்று 2-வது நாளாக நீடித்த நிலையில் இன்று 3வது நாளாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், குரோம்பேட்டை, ஆகிய பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது
 
அதேபோல் கோவை ஒப்பணக்கார வீதி யில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகளிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments