Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாமிர்த கடைகளில் ரெய்டு – வருமான வரித்துறை அதிரடி !

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (15:26 IST)
பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் கடைகளில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.

பழனி முருகன் கோயிலுக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் உலகப் புகழ்பெற்றது.  சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்துக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது அதன் பெருமைகளுள் ஒன்று.

இந்த பஞ்சாமிர்த தயாரிப்புகளில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் கந்தவிலாஸ் மற்றும் சித்த நாதன்  ஆகிய இரு நிறுவனங்கள் புகழ்பெற்றவை. இவ்விரு நிறுவனங்களும் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனைகளில் கோலோச்சி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அதிரடியாக இவ்விரு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments