Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீட்டாக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (13:49 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடங்கியதில் இருந்தே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை  தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தற்போது ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வெற்றியை  கொண்டாடி வருகின்றனர்.

 
இந்நிலையில், தமிழகத்தில் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  சூரியபிரகாசம் என்பவர் முறையீடு செய்துள்ளார். மேலும் அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.
 
இந்நிலையில் இந்த முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்  மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு முறையீட்டுக்கு பதிலாக வழக்காக தொடர்ந்தால் நாளை விசாரிப்பதாகவும் நீதிபதி  மகாதேவன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments